
Mrs. Mahmoodha Mansoor – Psychological Counselor, BA hon in Sociology, Dip in Counseling, NLPMasterpractitioner
உடலியல் ரீதியாக ஆண்களும் பெண்களும் வேறுபடுவதை போன்றுஉளவியல் ரீதியாகவும் ஆண்கள்பெண்கள் இடையேபல வேறுபாடுகள் காணப்படுகின்றன.
குடும்பஉளவளத்துணைஅமர்வுகளின் போது பல பெண்கள் முன்வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு தனது கணவர் தன்னோடு போதியஅளவு நேரம்எடுத்து பேசுவதில்லை என்பதாகும்.பெண்களை பொருத்தமட்டில் மனவெழுச்சிசார் வார்த்தைகள் மூலமாகதொடர்பாடலையே அதிகம் விரும்புகின்றனர். பேச்சாற்றல் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் என்பதால் பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 6 ஆயிரம் முதல் 7000 வரையான வசனங்களை பேசுகின்றபோது ஒரு ஆணோ 2000 தொட்டு 3 ஆயிரம் வரையான சொற்களையேகையாளுகின்றனர்.வெளியிடத்தில் வேலை செய்யும் ஆண்கள் கிட்டதட்ட இந்த 2000 வார்த்தைகளையும், அல்லது இதுக்கு கிட்டிய அளவில் வேலை செய்யும் இடத்தில்கதைத்து முடித்திருந்தால்,வீடு திரும்பியதின் பின் கதைப்பதற்கு அவர்களிடம் இருக்கும் வார்த்தைகள்மிகக் குறைவாகவே இருக்கும்.எனவே இதனைவைத்துநாம் அன்பின் ஆழத்தையோ,அதாவதுஆண்கள் பேசும் வார்த்தைகளின்அளவை வைத்து அவர்களது அன்பின் ஆழத்தையும், பாசத்தின் ஆழத்தையோ, அளவிட முடியாது .என்பது உண்மைபல பெண்கள் தன்னுடன் போனில் இன்னும் ஒருவர் கதைக்கிறார்அவர் தாராளமாக பேசுகிறார் வார்த்தைகளில் அன்பும் காதலும் நிரம்பி வழிகிறது,என்பதற்காகவே அவர்களுடன் உரையாடுகின்றனர். எனக்கு எதுவுமே தேவையில்லை எனது உணர்வுகளை புரிந்து என்னுடன் போதுமான அளவு நேரம் எடுத்து கதைத்தால்போதும்என்று கூறும் சகோதரிகள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்,அதிக அளவில் அல்லது மணி கணக்கில் கதைப்பது என்பது ஆண்களுக்கே உரிய பண்பு கிடையாதுஎன்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.அத்துடன் திருமணமான ஆண்களும்தம்மால் ஒரு நாளைக்கு கதைக்க முடியுமான வார்த்தைகளை வெளியிடத்தின்அல்லது வேலை செய்யும் இடத்தில் மொத்தமாக பேசித்தீர்க்காமல்தனது குடும்பத்தவர்களிடம் பேச சிறிதளவு வார்த்தைகளாவதுமீதம் வைத்துக் கொள்வது அவசியம்.ஏனெனில் சட்டவிரோத உறவுகளில் ஈடுபடும் அல்லதுசிக்கொண்டு சின்னாபின்னமான பல சகோதரிகள்உளவளதுணை அமர்வுகளில் குறிப்பிடும் முக்கிய விடயம் என்னவெனில் அவர் என்னோடு கதைப்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.என்பதோடு அவர்கள் எனது உணர்வுகளை புரிந்து நடப்பதை அவரது வார்த்தைகள் வெளிக்காட்டினர்.24 மணி நேரமும் இயந்திரமாய் உழைக்கும் எனக்கு அவருடன் பேசுவது மட்டும் தான் நிம்மதியை தந்தது.என குறிப்பிடுகின்றார்கள். எனவே குடும்பத்தை பாதுகாப்பதற்காக அல்லும் பகலும் உழைத்து ஆண்கள் சேமிக்கும் பணமோ வசதி வாய்ப்புகளோ,உழைப்போ, மட்டுமே வாழ்க்கையாகாதது என்பதனை புரிந்து கணவன்மார்கள் தனது மனைவியுடன் உரையாடுவதற்கு ஒரு நாளைக்கு ஆக குறைந்தது 30 நிமிடமாவது ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.இந்த விடயத்தை வழக்கமாக ஒவ்வொரு நாளும்ஒரு 20 நிமிடமாவது தனது மனைவியோடு உட்கார்ந்து கதைப்பதை வழக்கமாக்கி கொண்டால்உங்கள் குடும்பப் பெண்களை நீங்கள் ஏனைய ஆண்களின் வலைகளிலசிக்க வைக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.என்பதை நினைவில் கொண்டு செயல்படுவது சாலச்சிறந்ததாகும்.
அடுத்ததாக தீர்மானம் எடுப்பதை பொறுத்த அளவில் ஆண்கள் பெண்களிடம்பாரிய அளவுவேறுபாடு காணப்படுகிறது.ஆண்கள் நேரடியாக விடையத்தை கூறி அல்லது பேசி குறிப்பிட்டு அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவே முயல்வார்கள்.ஆனால் பெண்களை பொறுத்தளவில் பிரச்சினைகளை நேரடியாக கதைக்கவோ அல்லது முடிவுக்கு கொண்டு வர விரும்புவதை விட பிரச்சினைகளுடன் வாழவே விரும்புகிறாள்.
அதாவது பெண்களின் தீர்மானங்கள் இப்பொழுதும் உளவியல் ரீதியாக உணர்வுகளுக்குமுக்கியத்துவம் அளித்தது,இதயத்திலிருந்து எடுக்கப்படுகின்றன.ஆனால் ,ஆண்களோ யதார்த்தமாக யோசித்து சிந்தித்து அறிவுபூர்வமான முடிவுகளை மூளையை பயன்படுத்தியே எடுக்கின்றார்கள்.பெண்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொழுது நமது அனைத்து பிரச்சினைகளையும் ஒன்றாக ஒரு சங்கிலியை போன்று போர்வையாக பார்க்கின்றஅதே நேரம் ஆண்களின் பொருத்த அளவில் ஒவ்வொரு பிரச்சனைகளையும் தனித்தனி பெட்டிகளாக சிறுசிறு பெட்டிகளாகவே அவர்கள் மூளையினால் யோசிக்கின்றார்கள். ஆண்களும், பெண்களும் தீர்மானம் எடுப்பதில் வித்தியாசப்படுகின்றார்கள்.எங்கள் உணர்வுபூர்வமான முடிவுகளை எடுப்பதோடு, ஆண்கள் அறிவு பூர்வமான முடிவுகளை எடுக்கின்றார்கள். ஆனால் ஒரு குடும்பத்தை பொறுத்த அளவில் அறிவும் உணர்வும் சேர்ந்து எடுக்கப்படும் முடிவுகள் தான் சிறந்ததாக அமையும்.எனவே ஆண்களும் பெண்களும் (மஷுரா) கலந்துரையாடல் அடிப்படையில்எடுக்கப்படும் முடிவுகள் தான் நமது குடும்பத்தை முன்னேற்றுவதற்கும் சீரான வாழ்வின் கொண்டு செல்வதற்கும் உதவும்.என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அடுத்ததாக புலன் உணர்வுகளை பொருத்தமட்டில் ஆண்களைவிட பெண்களேபுலனுணர்வு கூடியவர்களாககாணப்படுகின்றார்.வாசனை திறனை பொருத்தமட்டில் அதிக வாசனை சக்தி பெண்களுக்கேகாணப்படுகிறது.சமையலறையில் சமைக்கும் வாசனை,சிறு பிள்ளைகளின் சுத்தம் சம்பந்தப்பட்ட வாசனைகள், கழிவறைகளின் சுத்தம்,என்பது அழகிய சுகாதாரமான குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு இது வழி வகுக்கின்றது. அதேபோன்று இஸ்லாம் ஆண்களை மனம்பூச அனுமதித்துள்ளது .அதேவேளை பெண்களை மனம்பூசிக்கொள்ளஅனுமதி அளிக்கவில்லை .இதிலும் பாரியதொரு உளவியல் காணப்படுகிறது .
அதே போன்று ஒரே நேரத்தில் பெண்களால் பல வேலைகளை அவதானிக்க முடிகின்றது.அதாவது ஒரே நேரத்தில்ஒரு பெண் உணவையும்சமைத்து கொண்டு, உடைகளையும் கழுவிக்கொண்டு ,தொலைபேசியில் இன்னொருவருடன் உரையாடியபடியே,தனது குழந்தையையும் பராமரித்துக் கொள்ளக்கூடியவளாக காணப்படுகின்றாள்.ஆனால் ஆண்களை பொறுத்தளவில் ஒரு நேரத்தில்ஒரு விடயத்தை மாத்திரமே அவர்களால் அவதானிக்க முடியுமாக இருக்கின்றது.தொலைக்காட்சிகளில் செய்தியை பார்த்துக் கொண்டிருக்கும்,ஒரு ஆண் தொலைக்காட்சிக்கு முன்னால் விளையாடிக் கொண்டிருக்கும் தனது குழந்தையை கூட சரியாக அவதானிக்க முடியாது நிலையில் காணப்படுகின்றார். அடுத்ததாக பெண்கள் அருகில் இருக்கும் சிறிய சிறிய பொருட்களை கூடிய துல்லியமாக அவதானிக்க கூடியவர்களாக காணப்படுகின்றார்கள். ஆனால் ஆண்களோ தூரத்தில் இருக்கும் பெரிய விடயங்களை மிகவும் சிறப்பாக அவதானிப்பார்கள்.அதாவது ஆண்களுக்கு தூர பார்வை அதிகமாகவும் பெண்களுக்கு குறுகிய இடத்தில் அண்மையில் இருக்கும் இடங்களை அழகிய முறையில் அவதானிக்க முடியுமாகவும் காணப்படுகின்றது.எனவே இவ்வாறான ஆண்களினதும் பெண்களினதும் உளவியல் வேறுபாடுகளை அறிந்து கொள்வதன் ஊடாக நாமும் எமது குடும்பத்தில் இந்த விடயங்களை செயல்படுத்திஎமது குடும்பத்தையும் சிறப்பானது ஒரு குடும்பமாக மாற்ற முயற்சி செய்வோம்.