
உள்ளம் சிதைத்த போது.
அவன் என்னிடம் தன் காதலை சொன்ன போது என் சாதாரண தர பரீட்சைக்கு ஒரு சில மாதங்களே இருந்தன.பரீட்சை பற்றிய பயங்கள் என்னை அவனை நோக்கி ஈர்த்தது.அவனிடம் நான் என்னை தேடத் தொடங்கினேன்.
அவனுடன் இருந்த கணங்களில் என் கவலைகள் எல்லாம் எங்கோ மறைந்து போனது.உலகம் புதிதாக இருந்தது. சிறுவயதில் என் தந்தையிடம் கிடைத்த அரவணைப்பை மீள அனுபவிப்பது போலிருந்தது.
Explore More