
அன்பாளும் உலகு…
வட்ஸப்பில் அதனைப் பார்த்ததிலிருந்து அவளது எண்ணம் அதையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. இதனை எப்படி அவரிடம் சொல்வது? சொன்னால் எப்படியான ரியாக்ஷன் வரும்? மாமியார் வீட்டிலிருந்து என்னென்ன சொல்வார்களோ? உம்மா வீட்டினரும் உடன் பிறப்புகளும் என்னென்ன சொல்வார்கள்? என்றெல்லாம் அடிக்கடி கேள்விக்கணக்குகள் மனதிற்குள் எழுந்து கொண்டேயிருந்தன. எதற்கும் அவசரப்படக் கூடாது. காலமும் நேரமும் கூடி வரும் வரை காத்திருந்தாள் ரஹீமா.
Explore More