• By eduartoflife@gmail.com
  • (0) comments
  • April 25, 2025

தாய்-சேய் ஆரோக்கியத்தை பாதிக்கும் இரத்தச் சோகை ( anemia ): காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள்

M.H.Wahab (Islahi), BA(UoP). PGD in Psychology (UoP), PGD in Child Protection & Rights (UoC), Diploma in Psychological Counselling (NISD), MSc Clinical & Health Psychology (R-UWL), Child Protection Officer of NCPA.

wahab.haneefa@gmail.com

இரத்தச் சோகை என்பது உலகளாவிய ரீதியல் வியாபித்துக் காணப்படும் ஒரு சுகாரப் பிச்சினையாகும். குருதியில், செங்குருதியின் அளவு அல்லது ஹீமோளாபின்  செறிவு குறைவாக இருக்கும் நிலையைக்  குறிக்கின்றது (WHO, 2023). ஹீமோகுளோபின் என்பது ஒரு புரதம், இரத்த சிவப்பணுக்களின் மிகவும் அவசியமான ஒரு அங்கமாகும். உடல் முழுவதும் உள்ள உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் சென்று வழங்குவதற்கான ஒரு வாகனமாக இது தொழிற்படுகிறது. இரத்த சோகையில் பல்வேறு வகைகள் உள்ளன. இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்த சோகை முக்கியமாக பெண்களையும் (குறிப்பாக கற்பிணிப் பெண்கள்) சிறுவர்களையும் அதிகமாகப்  பாதிக்கும் பொதுவான வகை ஆகும். இரத்தத்தின் அதிக தேவை காரணமாக கர்ப்ப காலத்தில் இந்த நிலை பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்.

இக்கற்றுரையின் நோக்கம், வாழ்க்கை முறை மாற்றத்தினூடாக  (lifestyle change) இந்நோய் நிலை ஏற்படுவதிலிருந்து தவிரந்து கொள்வதற்கும், நோய் நிலை ஏற்பட்ட பின்னர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழிகாட்டுவதாகும்.

இரத்தச் சோகையின் வியாபகம் (prevalence of anemia)

உலகளாவிய ரீதியில் 24.3% மானவர்கள் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட போதிலும் வயது, பாலினம் மற்றும் அமைவிடம் என்பவற்றுக்கேற்ப அதன் பரவல் (pசநஎயடநnஉந) வித்தியாசப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் 6 முதல் 59 மாதங்கள் வரையான 40% மான சிறுவர்களும் 37% மான கற்பிணித் தாய்மார்களும்  15 வயது முதல் 49 வயது வரையான 30% மான கற்பிணியல்லாத பெண்களும் இரத்தச் சோகை நோய் நலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (2023) குறிப்பிடுகிறது.

ஆண்களைவிட பெண்கள் (குழந்தையைப் பிரசவிக்கவுள்ள பெண்கள், மாதவிடாயுள்ள பெண்கள், குழற்தையைப் பெற்று ஒரு வருடத்துக்குட்பட்ட தாய்மார்) இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அமைவிடத்தைப் பொறுத்தவரை ஆபிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.

குடும்ப சுகாதார பணியக 2018 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி இலங்கiயில் 29.1% மான கற்பிணித் தாய்மார்கள் இரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு அனுராத மாவட்டத்தில் அமரசிங்க மற்றும் அவருடைய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி மூன்று மாத கற்பிணித் தாய்மார்களுக்கு மத்தியில் 14.4% இரத்தச் சோகை இனங்காணப்பட்டுள்ளது. அதே ஆண்டின் உலக வங்கயின் அறிக்கையின் படி இலங்கையில்  34.6% மான குழந்தை பெறும் வயதிலுள்ள (வயது 19-45, கற்பிணி அல்லாத) பெண்;கள் இரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தச்சோகை ஏற்படுவதற்கான காரணிகள்

இரத்த சோகை பல காரணிகளால் ஏற்படலாம். அவற்றுள் ஊட்டச்சத்து குறைபாடுகள், போதிய உணவை உள்ளெடுக்காமை (அல்லது ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு அகத்துறுஞ்சாமை), நோய்த்தொற்றுகள், அழற்சி, நாட்பட்ட நோய்கள், பெண்நோயியல் மற்றும் மகப்பேறியல் நிலைகள் மற்றும் பரம்பரை இரத்த சிவப்பணுக் கோளாறுகள் முக்கியம் பெறுகின்றன.

உணவுவேளiயில் போதுமானளவு இரும்புச் சத்துள்ள உணவுகளை எடுக்காமையினால் ஏற்படக் கூடிய இரும்புச்சத்து குறைபாடானது, இரத்த சோகைக்கு வழிவகுக்கும் மிகப் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடாக கருதப்படுகிறது. வைட்டமின் A, ஃபோலேட், வைட்டமின் B12 மற்றும் ரைபோஃப்ளேவின் ஆகியவற்றின் குறைபாடுகளும் இரத்தச் சோகையை ஏற்படுத்தும். காரணம், இவை ஹீமோகுளோபின் மற்றும் அல்லது எரித்ரோசைட் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவிர, (ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகளால் ஏற்படும் இரத்த இழப்பு, பிரசவத்துடன் தொடர்புடைய இரத்தக்கசிவு அல்லது மாதவிடாய் இழப்பு) போன்றவற்றினால் ஏற்படும் ஊட்டச் சத்து இழப்பு, பலவீனமான அகத்துறிஞ்சல் உறிஞ்சுதல், பிறக்கும் போது குறைந்த இரும்புச் சேமிப்புகள் மற்றும் இரும்பு உயிர் கிடைக்கும் ( iron bioavailability) தன்மையை பாதிக்கும் ஊட்டச்சத்து இடைவினைகள் ஆகியவையும் இரத்தச் சோகையை ஏற்படுத்தும் காரணிளுள் உள்ளடங்கும்.

இரத்தச் சோகையை ஏற்படுத்தும் மற்றுமொரு முக்கிய காரணியாக (மலேரியா, காசநோய், எச்.ஐ.வி மற்றும் ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள் போன்ற) தொற்று நொய்கள் காணப்படலாம்.  இவ்வாறான நோய்த்தொற்றுகள் ஊட்டச்சத்து அகத்துறுஞ்சல் மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம் (உதாரணமாக, மலேரியா, அஸ்காரியாசிஸ்) அல்லது ஊட்டச்சத்து இழப்பை ஏற்படுத்தலாம் (Ex: ஸ்கிஸ்டோசோமியாசிஸ், கொக்கிப்புழு தொற்று).

தொடர்ச்சியாகக் காணப்படும் கடுமையான மாதவிடாய் காரணமாக ஏற்படும் இரத்த இழப்புகள், கர்ப்ப காலத்தில் தாயின் இரத்த அளவு விரிவாக்கம் மற்றும் பிரசவத்தின் போதும் அதற்குப் பின்னரும் ஏற்படும் இரத்த இழப்புகள், குறிப்பாக பிரசவத்திற்குப் பின் ஏற்படும் இரத்தப்போக்கு போன்றன பொதுவாக இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.

மேலும், பரம்பரை இரத்த சிவப்பணு கோளாறுகள் இரத்த சோகைக்கு வழிவகுக்கும் பொதுவான காரணிகளாக அமைகின்றன. ஹீமோகுளோபின் தொகுப்பின் அசாதாரணங்களால் ஏற்படும் α- மற்றும் β-தலசீமியா, ஹீமோகுளோபின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் அரிவாள் கலக் கோளாறுகள், ஹீமோகுளோபின் மரபணு மாறுபாடுகளால் ஏற்படும் பிற ஹீமோகுளோபினோபதிகள், சிவப்பு அணு நொதிகளின் அசாதாரணங்கள் அல்லது சிவப்பு இரத்த அணுக்களின் அசாதாரணங்கள் போன்ற நிலைமைகள் இதில் அடங்கும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தீவிர இரத்தச்சோகையினால் தாய் மற்றும் சேய்க்கு ஏற்படக்கூடிய பாதமான விளைவுகள்

  • குறைமாத பிரசவத்துக்கு வழிவகுக்கும் : இரத்தச் சோகையானது கருவிலிருக்கும் ஒரு சிசு 37 வாரங்களுக்கு முன்னரே பிறசவிப்பதற்கான ஆபத்துக் காரணியாக அமகிறது.
  • குறைந்த பிறப்பு எடை: இரத்த சோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான குழந்தைகளை விட குறைவான எடையுடன் இருக்கலாம்.
  • கரு மரணம்: தீவிர நிலமைகளின்போது, இரத்த சோகை கரு மரணத்திற்கு ( பிரசவத்துக்கு முன்னரே தாயின் கருவறையில் மரணித்தல் )வழிவகுக்கும்.
  • மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு: கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை பிரசவத்திற்கு பின் ஏற்படும் மனச்சோர்வின் அபாயத்தை அதிகரிக்கும்.
  • குழந்தை இறப்பு: சில ஆய்வுகள் பிறப்பதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ உடனடியாக குழந்தை இறப்பு அபாயத்தைக் காட்டுகின்றன.
  • நஞ்சுக்கொடி சீர்குலைவு: கர்ப்ப காலத்தில் கடுமையான இரத்த சோகை நஞ்சுக்கொடி சீர்குலைவு அபாயத்தை அதிகரிக்கும்.
  • பிரசவத்திற்குப் பின் ஏற்படும் கடுமையான இரத்தக்கசிவு: கர்ப்ப காலத்தில் கடுமையான இரத்த சோகை பிரசவத்திற்குப் பின் ஏற்படும் கடுமையான இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும்.
  • கருக் குறைபாட்டை ஏற்படுத்தும் (Fetal Malformation): கர்ப்ப காலத்தில் ஏற்படும் கடுமையான இரத்த சோகை குறையுடன் கூடிய கரு வளர்ச்சியின் அபாயத்தை அதிகரிக்கும்.

இரத்தச் சோகை இருக்கின்றதா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?

இரத்த சோகை பொதுவாக கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அல்லது ஹீமாடோக்ரிட் அளவை அளவிடும் வழக்கமான இரத்த பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது:

  • ஹீமோகுளோபின்: நுரையீரலில் இருந்து உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் இரத்தத்தின் பகுதி
  • ஹீமாடோக்ரிட்: ஒரு குறிப்பிட்ட அளவு இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் சதவீதம்

இவற்றின் அளவை மதிப்பீடு செய்வதற்கு  பின்வரும் இரத்தப் பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம் : முழுமையான இரத்த எண்ணிக்கை (FBC) பரிசோதனை, சீரம் ஃபெரிடின், இரும்பு, மொத்த இரும்பு-பிணைப்பு திறன் மற்றும் டிரான்ஸ்ஃபெரின் பரிசோதனைகள். இவை தவிர இன்னும் பல பரிசோதனை முறைகள் காணப்படுகின்றன. அவை தேவை நிமிரத்தம் மகப்பேற்று வைத்திய நிபுணரினால் அவ்வப்போது பரிந்துரைக்கப்படலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக அவர்களின் கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக்குள்ளும், மீண்டும் 28 வாரங்களிலும் இரத்த சோகைக்கு பரிசோதிக்கப்படுகிறார்கள். யாரும் இரத்த சோகைக்கு அதிக ஆபத்தில் இருந்தால், அடிக்கடி இரத்தப் பரிசோதனைக்குட்படுத்தப்படுவர்.

இரத்தச் சோகையின் அறிகுறிகள் எவ்வாறு காணப்படும்?

இரத்த சோகை என்பது ஒருவரின் உடலில் போதுமான ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாதபோது அல்லது அவை சரியாக செயல்படாதபோது ஏற்படும் இரத்தக் கோளாறு ஆகும். இக்கோளாறின் அறிகுறிகளுள் பின்வரும் விடயங்கள் உள்ளடங்குகின்றன :

  • தோல்: வெளிர் அல்லது மஞ்சள் தோல், குறிப்பாக வெள்ளை தோலில் இவற்றை அவதானிக்கலர்
  • சோர்வு: பலவீனம், சோர்வு அல்லது ஆற்றல் இல்லாத உணர்வு
  • மூச்சுத் திணறல்: குறிப்பாக சுறுசுறுப்பாக இருக்கும்போது
  • தலைவலி: குறிப்பாக சுறுசுறுப்பாக இருக்கும்போது
  • இதயம்: விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
  • காதுகள்: காதுகளில் துடித்தல் அல்லது “ஹ_ஷிங்”, காணப்படும்.
  • கைகள் மற்றும் கால்கள்: கைகள் அல்லது கால்கள் குளிர்ச்சியாகக் காணப்படும். அல்லது இவ்வுறுப்புக்களில் உணர்வின்மை காணப்படும்.
  • நகங்கள்: உடையக்கூடிய நகங்கள் அல்லது ஸ்பூன் வடிவிலான நகங்கள்
  • மற்றவை: பசியின்மை, எரிச்சல், கவனம் செலுத்துவதில் பிரச்சனைகள் அல்லது எழுந்து நிற்கும் போது லேசான தலைவலி

இவை தவிர இன்னும் சில அறிகுறிகளும் காணப்படுகின்றன : புண் அல்லது வீக்கமடைந்த நாக்கு, வாய்ப் புண்கள், பெண்களில் அசாதாரணமான அல்லது அதிகரித்த மாதவிடாய் இரத்தப்போக்கு. இத்தகைய அறிகுறிகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் வைத்திய நிபுணர் ஒருவரின் உதவி மூலம் நோயை நிர்ணயிப்பதே மிகப் பொருத்தமானது.

கற்பகாலத்தில் இரத்தச் சோகை ஏற்படுவதிலிருந்து தவிர்ந்து கௌ;வது எவ்வாறு?

  1. இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ணுதல்:
  2. சிவப்பு இறைச்சி, கோழி மற்றும் மீன்
  3. அடர் பச்சை இலை காய்கறிகள்
  4. வலுவூட்டப்பட்ட தானியங்கள்
  5. முட்டைகள்
  6. வேர்க்கடலை
  7. உலர்ந்த பீன்ஸ் மற்றும் பட்டாணிக் கடலை ( பாசிப்பயறு)
  8. இவற்றுடன் ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, தர்பூசணி, கொடிமுந்திரி, அத்திப்பழம், உலர்ந்த பீச் மற்றும் உலர்ந்த பாதாமி பழங்கள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ளல்.
  9. மகப்பேறுக்கு முந்தைய வைட்டமின்களை எடுத்துக் கொள்ளல்: மகப்பேறுக்கு முந்தைய வைட்டமின்களில் பொதுவாக இரும்புச்சத்து உள்ளது.
  10. வைட்டமின் C உடன் இரும்புச் சத்தை சேர்த்து உட்கொள்ளல்: வைட்டமின் C உங்கள் உடல் இரும்பை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. ஆரஞ்சு சாறு, தக்காளி சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் C அதிகம் உள்ள உணவுகள் அல்லது பானங்களுடன் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.
  11. பரிசோதனை செய்துகொள்ளல்: இரத்த சோகைக்கான உங்கள் ஆபத்தைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்டு, உங்கள் முதல் மகப்பேறுக்கு முந்தைய வருகையின் போது பரிசோதனை செய்துகொள்ளுங்கள். பிரசவத்திற்குப் பிறகு நான்கு முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகும் நீங்கள் பரிசோதனை செய்யலாம்.
  12. கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 27 மில்லிகிராம் இரும்புச்சத்தை எடுத்துக்கொள்ளல். ஒருவர் இரத்த சோகைக்கு ஆளானால், அவருடைய மருத்துவர் இரும்புச் சத்துக்களை பரிந்துரைக்கலாம். அப்போது தவறாது அம்மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இரண்டு அருட்கொடைகளில் மனிதர்கள் பலர் கவனயீனமாக உள்ளனர்: ஆரோக்கியம் மற்றும் ஓய்வு’ (புகாரி).  இந்த நபி மொழி மனிதர்கள் தமது ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. எனவே, இங்கு முன்வைத்துக் கலந்துரையாடப்பட்ட இரத்தச் சோகை எனும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினையை முற்தடுப்பு செய்வதற்கும், நோய் ஏற்பட்டதன் பின்னர் அதிலிருந்து விடுபடுவதற்கும் எங்களுடைய நடத்தையைச் சரி செய்துகொள்வது மிக அவசியமாகும். நல்ல உணவுப் பழக்கம், வைத்தியரின் ஆலோசனைகளைச் சரியாகப் பின்பற்றுதல், பரிந்துரைக்கப்பட்ட உணவுகளை, மருத்துகளை, மருத்துவப் பரிசோதனைகளை, சுகாதார, மருத்துவ உளவியளாளர்களின் வழிகாட்டல்களை, மற்றும் உளவளத்துணையாளர்களின் பரிந்துரைகளை சரியான முறையில் சரியான நேரத்துக்கு, சரியான முறையில் முன்னெடுத்தல் போன்றன கருத்திற்கொள்ளப்படவேண்டிய நடத்தைகளாக எதிர்பார்;க்கப்படுகின்றன.

எமது மனப்பாங்கு மற்றும் நடத்தைகளில் மாற்றங்கள் வராத வரை எவ்வகையான ஆரோக்கியப் பிரச்சினைகளையும் வெற்றி கொள்வது அவ்வளவு எளிதானதல்ல.

eduartoflife@gmail.com

previous post next post

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

contact info

information

We don’t just work with concrete and We work with people We are Approachable, with even our highest work

are you ready to start your counseling

Art of Life is a social service organization focused on strengthening relationships within families and communities through online courses, classes, and seminars. We provide valuable education to help individuals build positive, supportive connections for healthier, more harmonious lives.

© 2025 Art of Life All Rights Reserved