
Asmiyas Shaheed
M.Phil (Mental Health)
Director of Research Division of National Institute of Social Development – Sri Lanka
Senior Counselor
குடும்ப வாழ்க்கை என்பது மிகவும் பெறுமதியானது போலவே புனிதமானது. அதனை பேணி பாதுகாப்பது ஒவ்வொரு தனிநபரினதும் கடமை போலவே சமூகத்தினதும் பொறுப்பாகும். இந்த பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் குடும்பத்தை மட்டுமன்றி சமூகத்தையும் பாதுகாக்க முடியாது போகும். சீரழிந்த சமூக வாழ்க்கைக்கு தள்ளப்படுவது தவிர்க்க முடியாதுபோகும்.
மேற்கத்திய உலகில் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையில் இருந்து திருமணமின்றி ஆணும் பெண்ணும் குறிப்பிட்ட காலம் உடன்படிக்கை அடிப்படையில் (living together) வாழும் ஆரோக்கிமற்ற பாதுகாப்பற்ற ஆறுதல் அற்ற வாழ்க்கை முறைக்கு சென்றுள்ளதை யாரும் அறிவோம். மேற்கத்திய உலகில் நேர்மையான கண்ணியமான மனிதர்கள் இருப்பது போலவே இந்த living together மூலமாக அதற்கு மாற்றமாக உள ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தனிநபர்கள் உருவாகுவது தவிர்க்க முடியாத விடயமாகும். அதாவது மேற்கத்திய உலகில் ஆரம்பத்தில் Extra Marital Relation சாதாரணமாக நிகழ்ந்ததை தொடர்ந்து இன்று living together என்ற நிலைக்கு வந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
எமது இலங்கை சமூகத்தை நோக்கும்போது அண்மை காலமாக Extra Marital Relationship ஓரளவு அதிகரித்து வருகிறது. இதனால் கணவன் – மனைவிஉறவு சிதைந்து சீரழிந்து போவது மட்டுமன்றி பிள்ளைகளினதும் அந்த குடும்பத்தில் உள்ள மூத்தவர்களினதும் மன உலைச்சல்கள் மிகவும் மோசமாகியுள்ளது.குடும்பத்தில் உள்ள சிறு பிள்ளைகளின் ஆளுமை பாரிய அளவில் பாதிக்கப்படுவதால் அவர்களின் கல்வி நடவடிக்கைகள் சரியாக இடம்பெறுவதில்லை. அது போல் அந்த பிள்ளைகள் Bed Wetting,Stummering Anxiety and Depression போன்ற உளக்கோளாறுகளுக்கு உட்படுவதை பார்க்கின்றோம். மறுபுறத்தில் குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் அதாவது பெற்றோர்கள் மன அழுத்தங்களுக்கும். மனச்சோர்வுக்கும் உட்படுவதால் இரத்த அழுத்தம்இ நீரிழிவு நோய் போன்ற உடல் நோய்களுக்கு உட்பட்டு அவஸ்தைபடுவதையும் கவலையுடன் கூற வேண்டியுள்ளது..எனவே இதற்கான தீர்வுகளை கட்டாயமாக தேட வேண்டியுள்ளது. அதற்கு முன்னர் இப்படியான குடும்ப வாழ்க்கையில் தப்பான உறவுகள் ஏற்படுவதற்கான காரணங்களை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
முதலாவது: கணவன் – மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் உறவில் ஏற்படக்கூடிய விரிசல் மிக முக்கிய காரணியாக உள்ளது. அதாவது இருவருக்கும் இடையில் புரிந்துணர்வு இல்லாத காரணத்தினால் முரண்பாடுகள் தோன்றுகின்றது. இது ஒருவருக்கொருவர் அன்புகொள்வதை இல்லாமல் செய்வதால் ஒருவரை பற்றிய மற்றவரின் பார்வை எதிர்கணியமாகிறது. இது அவர்களது உறவை பெரிதும் பாதிக்கின்றது. இதனால் இன்னொரு தப்பான உறவுக்கு செல்ல ஒரு தூண்டுதல் ஏற்படுகிறது.
இரண்டாவது: மனிதன் சமூகப்பிராணி என்றவகையில் தமது தனிப்பட்ட பிரச்சினைகளை வேதனைகளை இன்னொரு மனிதனுக்கு சொல்லி ஆறுதல் பெறுவது இயல்பான ஒரு விடயம் இப்படியான நிலையில் மனிதன் குடும்ப தகராறுகளை யாரிடம் சொல்கின்றோம் என்று சரியாக புரிந்து கொள்ளாமல் சொல்லும் போது சொல்லப்படக்கூடியவரும் இத்ததைகய குடும்ப பிரச்சினைக்கு உட்பட்டவராக இருந்தால் இந்த தப்பான உறவு வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. ஏனெனில் மனைவியுடன் தகராறு கொண்டுள்ள கணவன் நமது பிரச்சினையை இன்னொரு பெண்ணுக்கு சொல்லும்போது மறுபுறத்தில் கணவனுடன் தகராறு கொண்டுள்ள மனைவி இன்னொரு ஆடவருக்கு சொல்லி ஆறுதல் அடைய நினைக்கும்போது உறவுகள் பிழையான வழிக்குச் சென்றுவிடுவதை நாம் பார்க்கின்றோம்.
மூன்றாவது: இப்படியான குடும்ப பிரச்சினை உடைய குடும்பங்களை இனங்கண்டு அவர்களுடையபிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாம் உதவுவதாக கூறி தமது கீழ்தரமான உணர்வுகளை இச்சைகளை வெளிபடுத்த காத்திருக்கும் கயவர்களும் இத்தகைய தப்பான உறவுக்கு செல்வதற்கு முக்கிய காரணமாக உள்ளனர். இதனால் அப்பாவிதனமான பெண்கள் இந்த வளையில் இலகுவாக விழுந்து பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கு பதிலாக இன்ணெரு பிரச்சினைக்குள் மாட்டிக்கொள்ளும் அபாயமும் சமூகத்தில் பெருமளவு காணப்படுகிறது. அதாவது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதையாகும். தற்காலிகமாக தீர்வு கிடைப்பது போல இருந்தாலும் இந்த பொருத்தமற்றவர்களிடம் கதைப்பது நீண்ட காலத்தில் பாரிய மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிலபோது இது தற்கொலை முயற்சிகளுக்கு போவதை எனது உளவளத்துணை அமர்வுகளில் காணக்கூடியதாக இருந்தது.
நான்காவது; பொருளாதார பிரச்சினகள் இந்த இழிநிலைக்கு இட்டுச்செல்வதை நாம் பார்க்கின்றோம் கடன் வாங்கி அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால் தமது கற்பையே விலை பேசும் மாதுக்களையும் நாம் காணத்தான் செய்கின்றோம. கணவனுக்காக அல்லது தமது ஆடம்பர தேவைகளுக்காக அல்லது அடுத்தவனுக்கு உதவுவதற்காக கடனை பெற்றுக்கொண்டமைக்காக மாற்றான் மனைவியாக இருப்பதையும் சிலபோது மாற்றால் கணவனாக இருக்கும் துர்பாக்கியமான சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
ஐந்தாவது: தமது துணையிடம்(கணவன் அல்லது மனைவி) பாலியல் ரீதியான திருப்தியின்மைகள் தப்பான உறவுக்கு காரணமாக இருப்பதை இன்று பரவலாக காணக்கூடியதாக உள்ளது. இதற்கு பாலியல் தொடர்பாக போதுமான அறிவின்மை நண்பர்களிடம் அல்லது மூன்றாம்தரமான பாலியல் எனைநழ க்கள் மூலம் பிழையான பாலியல் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதும் இன்னொரு காரணமாக உள்ளது இதனைவிட பாலியல் கோளாறுகள் ( sexual disorder பிரதான(sexual Dysfuncation Diviation)போற்றவையும் தப்பான உறவுக்கு இட்டுச் செல்வதற்கான மிக பலமான காரணியாக இருக்கின்றது.
ஆறாவது குடும்பங்களில் தப்பான உறவுகள் ஏற்படுவதற்கு சமூக ஊடகங்கள் (social media)பங்கு மிக முக்கியமாகும். ஒருமுறை என்னிடம் கணவனுடன் உளவளத்துணை அமர்வுக்காக வந்த சேவைநாடி(client )என்னிடம் ‘எனக்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் அவரிடம் share பண்ணுவதன் மூலம் ஆறுதல் அடைகின்றேன் என்று கூறினார். அவர் யார் என்று நான் கேட்டதற்கு எனது Face boomநண்பர் என்றார்”. இது பற்றி கணவரிடம் கேட்டபோது தனக்கு தெரியாது என்று சொன்னார். அது மட்டுமன்றி தான் தொழிலுக்காக காலையில் போனால் இரவு 8மணி அல்லது 9மணி மணிக்கு தான் வீடு திரும்புவதாக கூறினார். எனவே இந்த ( social media meachunl relationship)பதிலாக (virtual relationship)உருவாக்கியுள்ளது. அதாவது குடும்ப உறவுகளுக்கு பதிலாக தனது உறவியர்களுக்கு பதிலாக கண்ணால் காணாதவர்களுடன் தேவையற்ற தொடர்புகளை உருவாக்கி குடும்ப வாழ்க்கையையே குட்டிச்சுவறாக்கியுள்ளனர்.
ஏழாவது: திருமணமான ஆண் அல்லது பெண் தனியாக மூன்றாவது நபருடன் தொடர்ந்தும் பயணங்களில் ஈடுபடுவதும் தப்பான உறவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது. உதாரணமாக முச்சக்கர வண்டி ( three – wheeler )தனியார் cab service போன்றவற்றில் ஒரே நபருடன் தொடர்ந்தும் பயணம் செய்வதன் மூலமும் தேவையற்ற உறவுகள் ஏற்பட்டு குடும்பங்கள் தவிடுபொடியாகும் வாய்ப்பு ஏற்படுகிறது.
தப்பான உறவுகள் எப்படி ஏற்படுகிறது?
இந்த தப்பான உறவுகள் உருவாக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்களை பார்ப்போனால் பல முறைகள் சூழ்நிலைகள் இது உருவாகுவதற்கு தூண்டுதலாக இருப்பதை பார்க்கின்றோம். அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.
1)குடும்ப கவலைகள் வேதனைகளை வெளிப்படுத்துவதற்காக ஆறுதலுக்காக தகுதியற்றவர்களிடம் கதைக்கும்போது தப்பான உறவுகள் ஏற்பட வாய்பேற்படுகிறது.
2). பொருத்தமற்றவர்களிடம் பொருள் உதவிகள் நிதி உதவிகள் அதுபோல கடன் உதவிகளை பெறும்போது இத்தகைய தேவையற்ற உறவுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது.
3. விரும்பத்தகாத பாலியல் தொடர்பான புத்தகங்கள் Audio , video களை மற்றும் Website களை பார்க்கும்போது அவற்றை புர்ந்துகொள்ளும்போது..
தப்பான உறவு இடம்பெறாதிருக்க என்ன செய்யலாம்.?
தப்பான உறவிற்கான காரணங்களை பார்த்தோம். அது எவ்வாறு இடம்பெறுகிறது என்பதையும் பார்த்தோம். இப்போது அதிலிருந்து தம்மை தன் துணையை மனித இனத்தை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று பார்ப்பது மிகவும் முக்கியமாகும்.
முதலாவது புரிந்துணுர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மனைவிக்கு பிடித்த விடயங்களையும்பிடிக்காத விடயங்களையும் புரிந்து கொள்ள கணவன் முயற்சிக்க வேண்டும். இது போலவே கணவனுக்கு விருப்பமானதையும் விருப்பமில்லாததையும் மனைவி புரிந்துகொள்ள வேண்டும். ஆண் பெண் வேறுபாடுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த புரிந்துணர்வு எதை சாப்பிடுவது எதை அணிவது போன்ற விடயங்களை மட்டுமல்ல தாம்பத்திய வாழ்க்கையில் உள்ள விருப்பு வெறுப்புக்களையும் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
இரண்டாவது: pre marital and post marital நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளல்.
ஏனெனில் இந்த சிக்கலான சமூகத்தில் (Complex society) மனித நடத்தையை மற்றும் திருமண உறவை புரிந்து கொள்வதற்கு இத்தகைய நிகழ்ச்சிகளில் கட்டாயமாக பங்குபற்றுவதன் மூலம் கணவன் மனைவிக்கிடையிலான உறவினை சரியாக புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. அதாவது இந்த நிகழ்ச்சிகளின் மூலம் திருமணத்தில் நோக்கம். தொடர்பாடல் முறைகள் ஆண்- பெண் வேறுபாடுகள்இ குடும்ப முரண்பாடுகளை தீர்த்தல்,தாம்பத்திய உறவு போன்ற தலைப்புகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வதன் ஊடாக கணவனும் மனைவியும் தங்களுக்கிடையில் அண்ணியோன்ய உறவினை பலப்படுத்த முடியும்.
மூன்றாவது: Family boundary and rules குடும்ப எல்லைகளை மாற்றி ஒழுங்குகளை பாதுகாத்தல்.
குடும்ப எல்லைகள் என்பது கணவன்மனைவி அல்லது கணவன் மனைவி பிள்ளைகள் இவர்கள் தங்களுடைய குடும்பத்துக்கு எல்லை ஒன்றை போட்டுக்கொள்ள வேண்டும். அதாவது இந்த குடும்ப எல்லைக்குள் மூன்றாவது நபரை அவசியமில்லாமல் வருவதற்கு வாய்ப்பளிக்க கூடாது. இதற்காக சில ஒழுங்குகளை பின்பற்ற முடியும். உதாரணமாக குடும்பத்தின் இரகசியங்கள் வெளியே போகாது பார்த்துக் கொள்ள வேண்டும். காண்பவர்களிடமெல்லாம் குடும்ப விவகாரங்களை பகிர்ந்து கொள்ள கூடாது. ஏனெனில் இவ்வாறு பகிர்ந்துகொள்ளும் போது அதனைக் கேட்டுக் கொண்டு இருப்பவர் நேர்மையற்றவராக இருந்தால் அவர் இந்த பிரச்சினைகளை தமக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே நேர்மையானவர்கள் அதேபோன்று முதிர்ச்சியடைந்த உளவளத்துணையாளர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியும்.
நான்காவது: அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடாது சோம்பேறித்தனத்தோடு இருப்பதை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இது இப்படியான தப்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவும். இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுவது போன்று மனிதன் பாவம் செய்வதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக அதிக ஓய்வு நேரம் காணப்படுவதாக குறிப்பிடுகின்றார். எனவே உளவளத்துணையின் ஒரு நுட்பமாக நுபெயபiபெ பயனுள்ள விடயமொன்றில் ஈடுபடுதல்) என்பதை நாம் பயன்படுத்துவதன் ஊடாக பயனுள்ள வேலைகளில் ஈடுபடுவதன் ஊடாக தேவையற்ற தொடர்புகளை தவிர்த்துகொள்ள முடியும்.
ஐந்தாவது: இத்தகைய ஆரோக்கியமற்ற தப்பான உறவுகளை ஆரோக்கியமான உறவுகளாக மாற்றுவதற்கு தனிநபர்களை போலவே சமூக நிறுவனங்கள் இயக்ககங்கள் நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானதாகும். அவற்றுள் சிலதை பின்வருமாறு .
1)மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை என்ற தொனிபொருளில் நாடளாவிய ரீதியில் கருதத்தரங்குகளை ஏற்பாடு செய்தல் அதற்கு பொறுத்தமான உளவியல்இ சமூகவியல் மற்றும் ஆன்மீக ரீதியில் பிரயோக ரீதியில் கதைக்கக்கூடிய புத்திஜீவிகளை கொண்டு உரைகளை ஏற்பாடு செய்தல். அவற்றின் மூலம் தப்பான உறவுகளால் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மோசமான விளைவுகளை எடுத்துக் காட்டுவது.
2)Pre – marital and post – marital நிகழ்ச்சிகளை திட்டமிட்ட அடிப்படையில் ஏற்பாடு செய்தல் இதற்கான பயலுனர்களுக்கான பயிற்சிகளை (Training of Trainer) வழங்குதல்.
3)மஸ்ஜித்கள் தமது ஜூம்மா மற்றும் வாராந்த பிரசங்கங்களை இது தொடர்பாக பயன்படுத்த முடியும். இதுபோலவே வானொலி,Tvநிகழ்ச்சிகளை பயன்படுத்துவதுடன் சமூக ஊடகங்களையும் முறையாகப்பயன்படுத்து வேண்டும்.
4)கல்வி நிறுவனங்களும் இதற்கான சூழ்நிலைகளை உருவாக்க முடியும்.இது தொடர்பான விழிப்புணர்வு நடத்துவதன் ஊடாக இந்த பிரச்சினையை தவிர்க்கலாம்.
ஆறாவது: தப்பான உறவுகளை தவிர்ப்பதற்காக இஸ்லாம் என்ன கூறுகிறது?
இஸ்லாம் மட்டுமல்ல எல்லா சமயங்களும் தப்பான உறவு என்பது மோசமானது என்று குறிப்பிட்டுள்ளதை நாம் இந்த இடத்தில் புரிந்துகொள்ள வேண்டும்.
பௌத்த சமயத்தில் சூத்திர தேசனாவில் உள்ள சிங்காலோவாதா சூத்திரத்தில் தப்பான உறவு குடும்ப வாழ்க்கையை பாதிப்பது பற்றி கூறியுள்ளது. சது சவ்வாச சூத்திரத்தில் இறந்த உடலும், இறந்த உடலும் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதாக சித்தரித்துள்ளது.
இந்து சமயத்தில் தப்பான உறவு அறியாமையை வெளிப்படுத்துவதாகவும், இழிவான செயலாகவும் கருதப்படுகிறது(அதிகாரம் பிறனில் விழையாமை குறல்-எண்142), (திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் -5)
கிறிஸ்தவ சமயத்தில் இச்சையோடு பெண்ணை பார்ப்பது விபச்சாரமாக கருதப்படுகிறது(மத்தேயு 5:27-32) அதுபோலவே விபச்சாரம் செய்த ஆணையும் பெண்ணையும் கொலை செய்ய கட்டளையிடுகிறது. (லேவியராகமம் 20:10)
ஏழாவது: இஸ்லாம் சொல்லும் ஒழுக்க விழுமியங்களை பின்பற்றுதல் அல்குர்ஆன் விபச்சாரம் செய்யாதே என்று சொல்வதற்கு பதிலாக விபச்சாரத்தின் பக்கம் நெருங்காகே என்று கூறியுள்ளமை மிகவும் அற்புதமாக இருப்பதை பார்க்கிறோம். அதாவது விபச்சாரத்திற்கு தூண்டுகோளாக அமையக்கூடிய அத்தனை வழிகளையும் முடிவிடுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. அல்குர்ஆனும் அதனை நடைமுறைப்படுத்த வந்த சுன்னாவையும் நாம் பார்த்தோமானால் இந்த தப்பான உறவை தடுப்பதற்காக பல்வேறு வழிகளை குறிப்பிட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றை சுருக்கமாக வாசகர்களுக்கு தருகின்றேன்.
மேலே தரப்பட்ட விடயங்களை கவனமாக வாசித்திருப்பீர்கள் என்று நான் நினைக்கின்றேன். அதன் மூலமாக தப்பான உறவுகள் தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல அவனது பிள்ளைகளின் வாழ்க்கையை அவர்களது பெற்றோர்களின் வாழ்க்கையை தாம் வாழும் சமூக வாழ்ககையை எந்தளவு தூரத்திற்கு பாதிக்கிறது. சமூகத்தில் உள்ள ஒழுக்கம் எந்தளவு தூரத்திற்கு கேவலப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நம்பிக்கை துரோகம் மட்டுமன்றி மனதத்தன்மையும் இழந்த மிருகத்தை விட கேடுகெட்டு போவதையும் புரிந்திருப்பீர்கள். அதுபோலவே எப்படி இத்தகைய பாவத்திலிருந்து இழிவான நிலையில் இருந்து உங்கள் குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாப்பதற்காக தனிநபர் என்றவகையிலும் ஒரு நிறுவனத்தின் அல்லது இயக்கத்தின் அங்கத்தவர் என்ற வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் முன்வைத்துள்ளேன். எனவே இந்த கட்டுரை பிரச்சினையை அதன் விளைவுகளை மட்டுமல்ல இந்த பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கான வழிமுறைகளையும் உளவியல் சமூகவியல் கண்ணோட்டத்தில் பிரயோக ரீதியில் எடுத்துக்காட்டியுள்ளது. எனவே தனிநபர்கள் அமைப்புகளின் அங்கத்தவர்கள் என்றவகையில் சிந்தித்து செயற்படுவதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் அருள் செய்வானாக.